பாட்னா: தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருப்பவர்கள் இந்தியா கூட்டணிக்கு வந்து விடுவார்கள் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “ நாங்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்துக்காக கைக்கோர்த்துள்ளோம். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அச்சம் காரணமாகவே பல கட்சிகள் இன்னும் நீடிக்கின்றன. 2024 மக்களவை தேர்தலின்போது அவர்கள் தேஜ கூட்டணியில் இருந்து வௌியேறி இந்தியா கூட்டணிக்கு வந்து விடுவார்கள்” என்று தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், “மணிப்பூர் மற்றும் நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் பணியாற்றி வருகின்றன ” என்றார்.
The post தேஜ கூட்டணியில் இருப்பவர்கள் ‘இந்தியா’வுக்கு தாவி விடுவார்கள்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கருத்து appeared first on Dinakaran.